திருக்கடிகை எனும் சோளிங்கபுரம் தற்போது (சோளிங்கர்) தமிழகத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில், 108 வைணவ திவ்ய தேசத்தில் ஒன்றாகவும், தொண்டை நாட்டு வைணவ திருக்கோயில்களில் 22-ல் ஒன்றாகவும், மிகச் சிறந்த பிராத்தனை திருத்தலமாக விளங்கி வருகிறது. இத்தலத்து எம்பெருமானை திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் போன்றவர்கள் மங்களாசாசனம் செய்து பாடல்கள் பாடியுள்ளனர். இத்தலத்தை ஆழ்வார்கள் புராணப் பெயரால் கடிகாசலம் என்றனர். தவப்பெரியோர்கள் ஏழு மாமுனிவர்களான வாம தேவர், வசிஷ்டர், கத்யபர் அத்திரி, ஜமதக்னி, கெளதமர், பரத்துவாஜர் ஆகியோர் சிங்கப் பெருமானை சாந்த வடிவில் தரிசிக்க விரும்பி இறைவனை தொழ எம்பெருமான் ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி அவர்கள் நினைத்தமாத்திரத்தில் ஒரு கடிகை ( ஒரு நொடிப்பொழுது) நேரம் அவர்களுக்கு திருமலையில் காட்சி அருளியதால் இத்தலம்...